வவுனியா மரக்காரம்பளை வீதி காத்தான் கோட்டம் சந்திக்கு அருகே இன்று (19.09.2017) இரவு 7.20 மணியளவில் இடம்பெற்ற முச்சகரவண்டி – மோட்டார் சைக்கில் விபத்தில் இரு சிறுவர்கள் உட்பட நால்வர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ் விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
மரக்காரம்பளை வீதியூடாக வவுனியா நோக்கி பயணித்த மோட்டார் சைக்கில் மீது காத்தான் கோட்டம் சந்திக்கு அருகே குழுமாட்டுச்சந்தியிலிருந்து கணேசபுரம் நோக்கி பயணித்த முச்சகரவண்டி மோதி விபத்துக்குள்ளானது.
இவ் விபத்தில் மோட்டார் சைக்கிலில் பயணித்த இரு சிறுவர்கள் உட்பட நால்வர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முச்சக்கரவண்டியில் சாரதி மதுபோதையில் உள்ளமையினால் முச்சகரவண்டியின் சாரதியினை நெளுக்குளம் போக்குவரத்து பொலிஸார் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நெளுக்குளம் போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.