சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபருக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை என்ன தெரியுமா?

407

14 வயதான சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியமை மற்றும் பெற்றோரின் சட்டரீதியான பொறுப்பில் இருந்து கடத்திச் சென்றமை ஆகிய குற்றங்களை எதிர்நோக்கிய ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 15 ஆண்டு கடூழிய சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

இந்த வழக்கு நீதிபதி கிஹான் குலதுங்க முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது நீதிபதி இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.

குற்றவாளிகளுக்கு 15 ஆயிரம் ரூபா அபராதம் விதித்த நீதிபதி, அபராத தொகையை செலுத்த தவறினால் மேலும் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

கொழும்பு சங்கராஜா மாவத்தை சேர்நத 45 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தைக்கே இந்த சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2009 ஆம் ஆண்டு இந்த சம்பவம் நடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.