77 வருடங்களாக உணவு, தண்ணீர் உட்கொள்ளாமல் வாழும் அதிசய மனிதர்!!

453

77 ஆண்டுகளாக தண்ணீர் மற்றும் உணவு உட்கொள்ளாமல் வாழும் 82 வயது சாமியார் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

இந்தியாவில் ப்ரஹ்லாத் ஜானி (82) என்பவர் வாழ்ந்து வருகிறார், கடந்த 77 ஆண்டுகளாக தான் உணவு சாப்பிடவில்லை மற்றும் நீர் குடிக்கவில்லை என்று கூறுகிறார்.

ப்ரஹ்லாத் ஜானியை மாதாஜி என்றும் மக்கள் அழைக்கிறார்கள். 100- 200 கிலோமீட்டர் நடந்தாலோ மற்றும் சில நேரம் 12 மணிநேரம் தியானம் செய்தால் ஜானிக்கு பசி அல்லது சோர்வு ஏற்படுமாம்.

10 நாட்களுக்கு மேல் ஒரு மனிதனால் தண்ணீர் குடிக்க முடியாமல் இருக்க முடியாது என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

இந்நிலையில், ஜானியை மருத்துவர்கள் கண்காணித்தனர், அதில் 15 நாட்களுக்கு உணவு மற்றும் தண்ணீரை அவர் உட்கொள்ளவில்லை என்பதை அறிந்து அவர்கள் வியப்படைந்தனர்.

ஜானி எதுவும் சாப்பிடவில்லை என்பதால் சிறுநீர் கழிப்பதும், மலம் கழிப்பதும் இல்லை. ஜானியின் கழிவறை மூடப்பட்ட நிலையில் அவரது ஆடைகளும் சோதிக்கப்பட்டது, அதிலும் எந்த தடயங்களும் இல்லை என தெரிவிக்கப்படுகின்றது.