காலை உணவுக்கு செத்த எலி!!

280

டெல்லியில் இயங்கிவரும் இந்தியத் தொழில்நுட்ப கல்வி நிறுவகத்தின் விடுதி மாணவர்களுக்குப் பரிமாறப்பட்ட உணவில் இறந்த எலியொன்று காணப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜயந்த் என்ற மாணவர், கடந்த செவ்வாயன்று அவருக்கு வழங்கப்பட்ட உணவை உண்ண முற்பட்டார். அப்போது, தேங்காய்ச் சட்னியில் எலிக்குஞ்சு ஒன்று இறந்த நிலையில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதை அவர் சமூக வலைதளத்திலும் பகிர்ந்தார்.

ஏற்கனவே அந்தச் சட்னியை ஏனைய மாணவர்கள் பலரும் சாப்பிட்டிருந்தனர். இதனால் அங்கு கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.

இதையடுத்து, கல்லூரி இயக்குனர் ராம்கோபால் ராவ் தலையிட்டு, குறித்த சம்பவம் பற்றி ஆராய மூன்று பேர் அடங்கிய குழுவை அமைப்பதாகவும், இனி இவ்வாறு நடக்காது என்று உறுதியளிப்பதாகவும் தெரிவித்ததையடுத்து மாணவர்கள் கலைந்து சென்றனர்.