பாடசாலை மாணவர்களுக்கான காப்புறுதித் திட்டம் அறிமுகம் : 2900 மில்லியன் ரூபா ஒதுக்கீடு!!

255

பாடசாலை மாணவர்களுக்கான காப்புறுதித் திட்ட அறிமுக நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அலரி மாளிகையில் நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது உரையாற்றிய ஜனாதிபதி, நாட்டின் 45 இலட்சம் மாணவர்களைப் பாதுகாப்பதற்கான முறையொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் விகாரைகளில் பயிலும் தேரர்கள் மற்றும் ஏனைய அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கும் இத்திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இதேவேளை, இந்தத் திட்டத்திற்காக 2900 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.