வவுனியா சின்னப்பூவரசங்குளம் விக்கினேஸ்வரா பாடசாலைக்கு பெருமை சேர்த்த மாணவர்கள்!!

332

 
வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கிடையே நடாத்தப்பட்ட கட்டுரை, கவிதை, பேச்சுப் போட்டிகளில் வவுனியா சின்னப்பூவரசங்குளம் விக்கினேஸ்வரா மகா வித்தியாலய மாணவர்கள் பல பரிசில்களையும் சான்றிதழ்களையும் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

சிறுவர் தின கட்டுரைப்போட்டியில் முதலாமிடம் ம.சங்கவி (கனிஸ்ட பிரிவு) , மூன்றாமிடம் ப.அக் ஷயா (கனிஸ்ட பிரிவு) , மூன்றாமிடம் சு.அனித்தா (சிரேஸ்ட பிரிவு)

முதியோர் தின கட்டுரை போட்டியில் முதலாமிடம் ம.சங்கவி (மத்திய பிரிவு) , இரண்டாமிடம் சி.திசானா (மத்திய பிரிவு) , ஆறுதல் பரிசு சி.மகிந்தன் மற்றும் கவிதைப் போட்டியில் மூன்றாமிடம் ஜ.விதுசிகா

பேச்சுப் போட்டியில் பங்கு பற்றி சான்றிதழ்களை தட்டிச் சென்ற மாணவர்கள் து.கபினேஸ், அ.லோஜிதா, தி.பிரியந்தினி ஆகிய மாணவர்ளே பாடசாலைக்கு பெருமை சேர்த்தவர்களாவார்.

பாடசாலை அதிபர் க.செல்வதேவன் தலமையில் செல்வி.தெ. துர்க்காஜினி ஆசிரியையின் நெறிப்படுத்தலில் இம் மாணவர்கள் வெற்றியீட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.