மகனைக் கொன்று விட்டு தந்தை தற்கொலை!!

406

தொம்பே – மல்வான பகுதியில் தனது மகனை கொன்ற தந்தை ஒருவர் தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இன்று காலை தனது மகனை கழுத்தை வெட்டிக் கொன்ற அவர், பின்னர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, சம்பவத்தில் கொலை செய்யப்பட்டவர் 31 வயதான இளைஞர் என்பதோடு, தற்கொலை செய்து கொண்ட தந்தைக்கு 74 வயதாகும்.

அத்துடன், கொலை செய்யப்பட்டவர் உளவளம் பாதிக்கப்பட்ட ஒருவர் என, பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை தொம்பே பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.