வவுனியா தொண்டராசிரியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!!

271

 
வவுனியா தெற்கு கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகளில் கடமையாற்றிய தொண்டராசிரியர்கள் இன்று(06.10.20170 கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வவுனியா தெற்கு வலயத்திற்கு முன்பாக இக் கவனயீர்ப்பு போராட்டம் ஒரு மணிநேரம் இடம்பெற்றிருந்தது.

வட மாகாணசபையினால் ஆசிரியர் நியமனத்திற்கு உள்வாங்கப்பட்டுள்ள 182 தொண்டராசிரியர்களின் பெயர்ப்பட்டியலில் முறைக்கேடுகள் இடம்பெற்றுள்ளதாகவும் தகுதியானவர்களுக்களின் பெயர்கள் தெரிவுப்பட்டியலில் உள்வாங்கப்படவில்லை எனவும் தெரிவித்தே கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த 10 வருடங்களுக்கம் மேலாக தொண்டராசியர்களாக கடமையாற்றிய தாம் பல தடவைகள் நேர்முகத்தேர்வுகளுக்கு சென்றிருந்தபோதிலும் தாம் புறக்கணிக்கப்பட்டு அரசியல் செல்வாக்கின் மூலமாக இந் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

தமக்கான நியமனங்கள் நீதியாக வழங்கப்படாத நிலையில் தொடர் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.