நடுத்தெருவில் சண்டை போட்டு ஒருவரின் மூக்கை உடைத்த நடிகர் சந்தானம்!!

464


கொடுக்கல் வாங்கல் தகராறில் வழக்கறிஞர் ஒருவரின் மூக்கை உடைத்ததாக நகைச்சுவை நடிகர் சந்தானத்தின் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.



தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் நடிகர் சந்தானம். இவர் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள இன்னோவேட்டிவ் கண்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்துடன் சேர்ந்து முன்றாம் கட்டளையில் திருமண மண்டபம் கட்டுவதற்காக 3 கோடி ரூபாய் முன்பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

பணத்தை பெற்று கொண்ட நிறுவனத்தின் மேலாளர் சண்முக சுந்தரம் 3 வருடமாக மண்டபத்தை கட்டிக்கொடுக்காத நிலையில், சந்தானத்திடம் வாங்கிய 3 கோடியில் சில லட்சங்களை பாக்கி வைத்து பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக திரும்பி கொடுத்துள்ளார்.



இந்நிலையில், மீதி பணத்தை கேட்க சண்முக சுந்தரத்தை பார்க்க சந்தானம் சென்றுள்ளார். அங்கு இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது வழக்கறிஞர் பிரேம் ஆனந்த என்பவர் அங்கு வர அவருடனும் சந்தானம் தகராறு செய்துள்ளார்.



அப்போது நடுத்தெருவில் பிரேம் ஆனந்தை சந்தானம் அடிக்க அவர் மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது. அவர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதையடுத்து சந்தானம் தனக்கும் காயம் உள்ளதாக கூறி வேறு மருத்துவமனையில் சேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.


சந்தானத்திடம் அடிவாங்கிய பிரேம் ஆனந்த் பாரதீய ஜனாதாவை சேர்ந்தவர் என்பதால் அவருக்கு ஆதரவாக வளசரவாக்கம் காவல் நிலையத்தில் கட்சியினர் திரண்டுள்ளனர்.

இதுகுறித்து பொலிசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் விசாரித்து வருகிறார்கள்.