மதுரை ஆதீன மடத்திற்குள் நுழைய நித்யானந்தாவுக்கு இடைக்கால தடை!!

664


மதுரை ஆதீன மடத்துக்கள் நித்யானந்தா நுழைவதற்கு நிரந்தர தடை விதிக்கக்கோரி ஜெகதலபிரதாபன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.



அவர் தனது மனுவில், நித்யானந்தா ஆதீன மடத்திற்கள் நுழைய தடை விதித்துள்ள நிலையில், மடத்திற்கு செல்ல போலீஸ் பாதுகாப்பு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நித்யானந்தா மடத்திற்குள் நுழைந்தால் தேவையில்லாத சர்ச்சைகள் ஏற்படும், எனவே, மடத்திற்குள் நுழையவும், மடத்தின் நிர்வாகத்தில் தலையிடவும் நித்யானந்தாவுக்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் கூறியிருந்தார்.



அவரது மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரின் மனுவை பரிசீலனை செய்த நீதிமன்றம், நித்யானந்தா ஆதீன மடத்திற்குள் நுழைவதற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.



மடத்தின் நிர்வாகத்தில் நித்யானந்தா மற்றும் அவரது சீடர்கள் தலையிடவும் தடை விதித்தது.


மேலும், இதுதொடர்பாக நித்யானந்தா மட்டுமின்றி தமிழக அரசின் தலைமை செயலாளர், இந்து அறநிலையத்துறை மற்றும் மதுரை கலெக்டர் ஆகியோர் பதில் அளிக்க உத்தரவிட்ட நீதிமன்றம், வழக்கின் விசாரணையை 4 வாரத்திற்கு ஒத்திவைத்துள்ள