இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!!

247


இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை கடந்த செப்டம்பர் மாதத்தில் அதிகரித்துள்ளது.



கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை 2.3 வீதமாக அதிகரித்திருப்பதாக இலங்கை சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகார சபையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரித்தானியா, கிழக்கு ஐரோப்பா, ரஷ்யா, உக்ரைன், இந்தியா ஆகிய நாடுகளிலிருந்து வருகை தரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



கடந்த 9 மாதத்தில் 15,51,000-இற்கும் அதிகமானோர் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.