விமான நிலையத்தில் இலங்கையர்களின் 1.5 கிலோ தங்கம் பறிமுதல்!!

277


கோவை விமான நிலையத்தில் வைத்து இலங்கையர்கள் மூவரிடம் இருந்து 1.5 கிலோ கிராம் எடையுடைய தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.



நேற்று முன்தினம் கொழும்பிலிருந்து கோவை சென்ற விமானத்தில், விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின் போது குறித்த மூவரும் அணிந்திருந்த மற்றும் துணிகளுக்கு இடையில் மறைத்து வைத்திருந்த 1.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தமிழக ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுங்க வரி செலுத்தாமையின் காரணமாக இந்த நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



இந்நிலையில், உரிய சுங்க வரி மற்றும் அபராத தொகையை செலுத்தினால் மீளவும் நகைகள் கையளிக்கப்படும் என சுங்க திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.