மட்டக்களப்பு – வாழைச்சேனையில் கரையோர காவற்படையினரால் அரியவகை மீன் ஒன்று பிடிபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மீன் பிடிப்பதற்கு நேற்று கடலுக்குச் சென்று திரும்பிய படகு ஒன்றில் இருந்தே குறித்த மீன் கைப்பற்றப்பட்டுள்ளது.
பிடிப்பதற்கு தடைசெய்யப்பட்ட 160 கிலோ கிராம் நிறையுடைய “புலிச்சுறா” எனும் மீன் ஒன்றே இவ்வாறு படகிலிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.
வாழைச்சேனை மீன்பிடி துறைமுக பகுதியில் வைத்து இந்த புலிச்சுறாவினை கரையோர காவற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
“இந்த வகை மீன் இனம் தடை செய்யப்பட்ட மீன் என்பது தாங்கள் அறிந்திருக்கவில்லை” என்று படகில் வந்த மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த மீன் இனம் கடல்வாழ் பேரினத்தில் எஞ்சியிருக்கக்கூடிய ஒரே சுறா இனம் என்பதுடன் இதனை “கடல்புலி” என்றும், இதன் உடலில் காணப்படும் ஆழ்ந்த கோடுகள் புலியின் தோலினைப் போல ஒத்திருப்பதால் “புலிச்சுறா” என்றும் அழைக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.