வவுனியா முஸ்லிம் மகா வித்தியாலய ஆசிரியர்கள் வகுப்புக்குச் செல்ல மறுப்பு!!

602


 
வவுனியா முஸ்லிம் மகா வித்தியலாயத்தில் இன்று (12.10.2017) காலை 8.30 மணியளவில் ஆசிரியர்கள் வகுப்பறைக்கு செல்ல மறுப்பு தெரிவித்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

பாடசாலை தொடர்பாக சமுக வலைத்தளமான முகநூல் பக்கத்தில் அவதூறு பரப்பும் வகையில் பதிவுகள் மேற்கொண்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று (12.10.2017) காலை 8.30 மணிமுதல் தமது கடமைக்கு செல்லாது பாடசாலை ஆசிரியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.



இதனையடுத்து பாடசாலைக்கு சமுகமளித்த வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிப்பாளர் வீ .இராதாகிருஷ்ணன் , வவுனியா மாவட்ட பிரதி தலமை பொலிஸ் பொறுப்பதிகாரி குமாரசிங்க, நெளுக்குளம் பொலிசார் சம்பவம் தொடர்பான விடயங்களை கேட்டறிந்ததுடன் பொலிஸ் தலைமையகத்திற்கு உடனடியாக அறிவிக்கப்பட்டு சைபர் பிரிவின் உதவியுடன் நபரைக் கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்வதாகவும் பொலிசார் வாக்குறுதியளித்துள்ளனர்.



ஆசிரியர்கள் பணிப்புறக்கணிப்பிணை கைவிட்டு கற்பித்தல் நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறும் இவ்விடயம் தொடர்பாக அதி கூடிய கவனமெடுத்து நடவடிக்கை மேற்கொள்வதாவும் வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிப்பாளர் வீ.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.



இதனையடுத்து பணிப்புறக்கணிப்பு முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.