வவுனியா பிரதேச செயலக ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் இன்று (12.10.2017) காலை 10 மணியளவில் வவுனியா பிரதேச செயலாளர் கா உதயராசா தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்று வருகின்றது.
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதித்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், நகரசபை செயலாளர் ஆர் தயாபரன், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை செயலாளர் திருமதி சுகந்தி கிஷோர் , உள்ளுராட்சி உதவி ஆணையாளர் அசங்க காஞ்சன குமார, சமுதாய அடிப்படை வங்கி பிரதேச பணிப்பாளர், கிராம சேவையாளர்கள், உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.