வவுனியாவில் நாளை பூரண கர்த்தாலுக்கு வர்த்தகர் சங்கம் ஆதரவு!!

511

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியறுத்தி வட மாகாணத்தில் நாளைய தினம் (13.10.2017) இடம்பெறவுள்ள பூரண கர்த்தாலுக்கு வவுனியா வர்த்தகர் சங்கம் தமது பூரண ஆதரவினை வழங்குவதாக வர்த்தகர் சங்கத் தலைவர் ரி.கே.இராஜலிங்கம் தெரிவித்தார்.

நாளை வட மாகாணத்தில் இடம்பெறவுள்ள பூரண கர்த்தால் தொடர்பான கலந்துரையாடல் இன்று (12.10.2017) காலை 11.30 மணியளவில் வவுனியா வர்த்தக சங்க அலுவலகத்தில் வவுனியா வர்த்தகர் சங்கத் தலைவர் தலைமையில் இடம்பெற்றது.

இக் கலந்துரையாடலில் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டு நாளைய தினம் தாங்கள் இவ் கடையடைப்புக்கு பூரண ஆதரவை வழங்குவதாக தெரிவித்தனர்.

அதன் அடிப்படையில் நாளைய தினம் கடையடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு வழங்குவதாக வவுனியா வர்த்தக சங்க தலைவர் தெரிவித்தார்.

வவுனியாவில் நாளை அரசியல் கைதிகள் விடுதலை வேண்டி விசேட பூசை வழிபாடுகள்

அரசியல் கைதிகள் விடுதலையை வழியுறுத்தி நாளைய தினம் (13.10.2017) நண்பகல் 1.30 மணிக்கு குட்செட் வீதி கருமாரி அம்மன் ஆலயத்தில் வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியம், தமிழ் விருட்சம், கருமாரி அம்மன் ஆலய பரிபாலன சபையினர் இணைந்து ஏற்பாடு செய்துள்ள விசேட பூசை வழிபாடுகள் இடம்பெறவுள்ளது.

நீண்ட காலமாக சிறைகளில் வாடும் கைதிகளின் விடுதலை வேண்டியும், அவர்களின் நல் வாழ்வுக்காகவும், அனைத்து உயிர்களின் சேமத்திற்காகவும் இடம்பெறவுள்ள இறை பிரார்த்தனையில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டு குழுவினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

நாளையதினம் அரசியல் கைதிகளின் விடுதலையினை வழியுறுத்தி வடக்கு மாகாணம் முழுவதும் பூரண கர்த்தால் அனுஸ்டிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.