வவுனியா சைவப்பிரகாசா மகளிர் கல்லூரியில் உளவளநாளில் முதியோர் விழிப்புணர்வு!!

614

 
வவுனியா சைவப்பிரகாசா மகளிர் கல்லூரியில் நேற்று முன்தினம் (10.10.2017) காலை 7.30 மணிக்கு கல்லூரி அதிபர் திருமதி பா.கமலேஸ்வரி தலைமையில் மாவட்ட சமூகசேவை அலுவலகத்தால் இச்செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இளம் தலைமுறையினர் தாய் தந்தையரின் வார்த்தைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும், மூத்தோர் விழுமியங்களை பாடசாலைகளில் கற்றுக்கொள்ளவேண்டும், நல் ஆசிரியர்களை மாதிரியாகப் பின்பற்றல் வேண்டும் என அதிபர் திருமதி பா.கமலேஸ்வரி தனது தலைமை உரையில் குறிப்பிட்டார் .

மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் இன்தமிழ் இனியன் செ.ஸ்ரீநிவாசன் மூத்தோரை இளைய தலைமுறையினர் செவிமடுக்க வேண்டும், உற்றுக் கேட்க வேண்டும் என்ற வகையில் ‘கூரைஇல்லா வீடும் மூத்தோர் இல்லா வாழ்வும் ‘என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்.

நிகழ்வில் வவுனியா நகர முதியோர் சங்க தலைவர் தா.சலசலோசன் பாடசாலை அபிவிருத்திச்சங்கச் செயலாளர் க.உதயகுமார் அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.கே.வசந்தன் பிரதி அதிபர்,  ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.