லண்டன் பாலத்தில் வைத்து மூவர் மீது கத்தி குத்து தாக்குதல்!!

788

லண்டன் Bridge station பகுதியில் 3 இளைஞர்கள் கத்தி குத்துக்கு இலக்காகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

லண்டன் நேரப்படி இன்று காலை 6 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்துள்ளார். மோதல் ஒன்றின் பின்னரே இந்த கத்தி குத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

20 வயதிற்கு உட்பட மூவரே இவ்வாறு கத்தி குத்துக்கு இலக்காகியுள்ளதாகவும் அவர்களை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் காயங்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.