30 அடி உயர கோவிலில் இருந்து விழுந்து உயிரிழந்த பிரித்தானியர் : செல்பியால் நேர்ந்த பரிதாபம்!!

285

 
இந்தியாவிற்கு சுற்றுப் பயணத்திற்கு சென்ற பிரித்தானியர் ஒருவர் அங்குள்ள கோவில் ஒன்றைப் படம் பிடிக்கும் போது கீழே தவறி விழுந்து மரணமடைந்துள்ளார்.

பிரித்தானியரான Roger Stotesbury(58) அவரது மனைவியுடன் ஓராண்டு நீண்ட சர்வதேச சுற்றுப்பயணத்தின் ஒருபகுதியாக இத்தாலி, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, அவுஸ்திரேலியா மற்றும் சில ஆசிய நாடுகளுக்கும் சென்று அங்குள்ள சுற்றுலா தலங்களை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து தங்களது வலைதளத்தில் பதிவேற்றம் செய்து வந்துள்ளனர்.

பயணத்தின் ஒருபகுதியாக இந்தியாவின் பழமையை தெரிந்து கொள்ளவும், இந்தியாவின் கட்டிடக் கலையை ரசிக்கவும் இந்தியாவிற்கு வந்துள்ளனர். முதல் கட்டமாக வட மாநிலங்களை சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் ஒரு புகைப்படங்கள் எடுப்பதற்காக மத்திய பிரதேசத்தில் இருக்கும் ஆர்ச்சா என்ற நகரத்தில் அமைந்துள்ள லக்ஷ்மி நாராயனண் கோவிலுக்கு சென்றுள்ளார். கோவிலின் கட்டிடங்களை தான் எடுக்கும் ஆவணம் படம் ஒன்றிற்காக வீடியோ எடுத்துள்ளார். இந்த நிலையில் அவர் கோவிலின் மேல் பகுதியில் இருந்து, அந்த நகரம் எப்படி இருக்கிறது என்பதை வீடியோ எடுப்பதற்காக மேலே ஏறியுள்ளார்.

அப்போது அங்கிருந்து அவர் செல்பி எடுத்த போது கீழே பார்க்காமல் அப்படியே நடந்த அவர் கால் தவறி மாடியில் இருந்து 30 மீற்றர் கீழே விழுந்திருக்கிறார். இதில் காயமடைந்த அவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தை நேரில் பார்த்த அவரது மனைவி அந்த இடத்திலேயே மயக்கமுற்று சரிந்துள்ளார். இதனிடையே உயிரிழந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் லண்டனுக்கு கொண்டு செல்லப்படும் என அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.