வவுனியா கனகராயன்குளத்தில் கேரள கஞ்சாவுடன் நால்வர் கைது!!

311

வவுனியா கனகராயன்குளம் பகுதியில் பல லட்சம் பெறுமதியுடைய கேரள கஞ்சாவுடன் நால்வரை பொலிஸ் கைது செய்துள்ளனர்.

கனகராயன்குளம் பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமிந்த பிந்து தலை மையில் போக்குவரத்து பொலிஸ் நிலைய பொருப்பதிகாரி அசேல வழிகாட்டலின் கீழ் பொலிஸ் கோஸ்தபர்களான வீரசிங்க (32535), விஜயசிறி (86791 )ஆகிய பொலிஸாரினால் யாழ்ப்பாணத்திலிருந்து தென்பகுதி நோக்கி பயணித்த சிறிய ரக காரை கனகராயன்குளம் பகுதியில் வைத்து சோதனையிட்ட சமயத்தில் வாகனத்திலிருந்து 9 கிலோ 732 கிராம் கேரள கஞ்சாவினை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

வாகனத்தில் சாரதி உட்பட நால்வரை (வயதுடைய – 28,28,28,33) பொலிஸார் கைது செய்துள்ளதுடன் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த நபர்களை வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சமயத்தில் குறித்த நான்கு நபர்களையும் எதிர்வரும் 23ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்திரவிட்டார்.