அனுராதபுரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பண்டைய காலத்து புதையல்!!

488

 
அனுராதபுரத்தில் பெறுமதிமிக்க தொல்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அனுராதபுரம், உச்சாவாலி விகாரையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு நடவடிக்கையின் போது பெறுமதியான சில தொல்பொருள் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சிகப்பு நிறத்திலான களிமண் கோப்பையில் இருந்து பல்வேறு சின்னங்களை கொண்ட 325 நாணய குற்றிகள் மற்றும் ஆடைத் துண்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்படுகின்றது.

மத்திய கலாச்சார நிதியிலான திட்டத்தின் மூலம் இந்த அகழ்வு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.

இந்நிலையில் தொல்பொருள் தொடர்பில் ஆய்வு நடவடிக்கைககள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த விகாரையின் தாதுகோபுரம் மன்னர் ஒருவரின் உதவியால் கட்டப்பட்டதாக நம்பப்படுகின்றது.