நெதர்லாந்தில் உலகின் முதல் 3D பாலம் திறப்பு!!

444


 
நெதர்லாந்தில் 3D பிரிண்டிங் தொழில்நுட்பம் மூலம் பாலம் ஒன்று உருவாக்கப்பட்டு, ஸ்மார்ட் என்ற இடத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

3D பிரிண்டிங் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி நிறைய பொருட்கள் உருவாக்கப்படுகின்றன. எந்திரக்கைகள், மருத்துவப் பயன்பாடுகளுக்கான உபகரணங்கள் போன்றவை தயாரிக்கப்பட்டு வருகின்றன.



இந்த நிலையில், தற்போது நெதர்லாந்தில் 3D பிரிண்டிங் தொழில்நுட்பம் மூலம் பாலம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த பாலத்தின் நீளம் மொத்தம் 8 மீட்டர் ஆகும். இது 800 அடுக்குகளால் ஆன பொருட்களால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பாலம் 40 லொறிகளை ஒரே நேரத்தில் தாங்கும் அளவு வலிமை வாய்ந்தது.



கொன்கிரீட் பாலத்தைப் போலவே இதன் வாழ்நாள் அதிகம். இந்த பாலத்தை உருவாக்க 3 மாதங்கள் பிடித்துள்ளது. சாதாரண பாலத்தை உருவாக்கும் செலவில் பாதிதான் இதற்கு செலவானதாகக் கூறப்பட்டுள்ளது.