வவுனியா ஸ்ரீ கந்தசுவாமி கோவிலின் வருடாந்த கந்த சஷ்டி விரத உற்சவம் கடந்த 20.010.2017 வெள்ளிக்கிழமை ஆரம்பமானது .
ஐந்தாம் நாளான நேற்று 24.10.2017 செவ்வாய்கிழமை காலை முதல் ஆறுமுக சுவாமிக்கு அபிசேகங்கள் இடம்பெற்று விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. தொடர்ந்து தேர் திருப்பணிக்கான அறிவிப்பு விடுக்கப்பட்டது.
பிற்பகல் வேலையில் சூரன்போருக்கான முன் ஆயத்தமான சூரன் தளகாடும் நிகழ்வும் கொட்டும் மழைக்கும் மத்தியில் இடம்பெற்றது .
மாலையில் வசந்த மண்டப பூஜையின் பின் முருகபெருமான் உள்வீதி வெளி வீதி வலம் வந்த நிகழ்வும் இடம்பெற்றது.