புற்றுநோயாளிகள் சிரித்தால் மட்டுமே முகங்காட்டும் விசித்திரக் கண்ணாடி!!

500


புற்றுநோயாளிகளுக்காகவே நவீன தொழில்நுட்பத்துடனான முகம் பார்க்கும் கண்ணாடியை துருக்கியைச் சேர்ந்த பெர்க் இல்ஹான் என்பவர் உருவாக்கியுள்ளார்.



இந்த கண்ணாடி சிரித்தால் மட்டுமே முகத்தைக் காட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. டேப்லட் போலவே இருக்கும் இந்தக் கருவியில் கண்ணாடியும் கெமராவும் பொருத்தப்பட்டுள்ளன.

முக உணர்ச்சிகளைக் கண்காணித்து, சிரித்தவுடன் சட்டென்று கண்ணாடியில் முகத்தைக் காட்டும். சிரிக்கவில்லை என்றால் கண்ணாடியில் முகம் தெரியாது.
வழக்கமான கண்ணாடி போலவே சுவரில் மாட்டவோ மேசையில் வைக்கவோ முடியும்.



சுமார் 2,000 டொலர்கள் முதல் 3,000 டொலர்கள் வரையான விலையில் இந்தக் கண்ணாடி விற்கப்படுகிறது.



”எந்த கஷ்டம் வந்தாலும் அதைக்கண்டு துவண்டு போகாமல், நம்பிக்கையோடும் புன்னகையோடும் எதிர்கொண்டால் நோய் விரைவில் குணமாகும். அல்லது மரணமாவது தள்ளிப்போகக்கூடும். நியூயார்க்கில் படிப்பை முடித்தவுடன் சில புற்றுநோய் மருத்துவமனைகளுக்கு சென்று ஆய்வு நடத்தினேன். சிரிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியும் ஆயுளும் அதிகரிக்கும் என்பதை அறிந்துகொண்டேன். புற்றுநோயாளிகளிடமும் மருத்துவர்களிடமும் பேசினேன். 2 ஆண்டுகள் கடுமையாக உழைத்து, சிரித்தால் முகம் காட்டும் கண்ணாடியை உருவாக்கினேன்,” என பெர்க் இல்ஹான் கூறியுள்ளார்.