டுவிட்டரில் புதிய மாற்றம்!!

395


டுவிட்டரில் பதிவிடக்கூடிய எழுத்துக்களின் எண்ணிக்கையை 140 லிருந்து 280 ஆக அதிகரித்துள்ளதாக டுவிட்டர் நிறுவனம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.



இந்நிலையில் ஆரம்பத்தில் இருந்த எழுத்துக்களின் எண்ணிக்கையை விட இது இரு மடங்காகும்.

பயனாளிகள் டுவிட்டர் பக்கத்தில் தரவுகளை தெளிவாகவும் விரிவாகவும் பதிவிடக்கூடிய வகையில் தனது நடவடிக்கைகளை விஸ்தரித்துள்ள, நிலையில், பதிவிட்ட தரவுகளை மீள் திருத்தம் அதாவது எடிட் செய்யக்கூடிய வசதிகளை வழங்குமாறு டுவிட்டர் பயனாளிகள் பலர் டுவிட்டர் பங்கங்களில் கருத்து வெளியிட்டுள்ளனர்.