வவுனியாவின் முன்னாள் பா.உ அமரா் தா.சிவசிதம்பரம் அவர்களின் 25ம் ஆண்டு நினைவு தினம்!!

584

 
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தாமோதரம்பிள்ளை சிவசிதம்பரம் அவர்களின் நினைவு தினம் இன்று (09.11.2017) காலை 8.30 மணியளவில் வவுனியா வைரப்புளியங்குளத்தில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத்தூபியில் தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்தரகுமார் கண்ணன் தலைமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் வவுனியா மாவட்ட மூத்த சட்டத்தரணியும் மாவட்ட அபிவிருத்திச்சங்கத் தலைவரும் அமரர் சிவசிதம்பரத்தின் திருவுருவச்சிலையை நிறுவியவருமான முருகேசு சிற்றம்பலம், முன்னாள் வடமாகாண சுகாதார அமைச்சரும் வடமாகாண சபை உறுப்பினருமான மருத்துவர் ப.சத்தியலிங்கம், முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோதாராலிங்கம், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன், வவுனியா முன்னாள் உப நகரபிதா சந்திரகுலசிங்கம் மோகன், சமுக சேவைகள் திணைக்கள உத்தியோகத்தர் எஸ்.எஸ்.வாசன் , தமிழரசுக்கட்சியின் உறுப்பினர்கள், புளொட் அமைப்பின் உறுப்பினர்கள், ரெலோ அமைப்பின் உறுப்பினர்கள், சமூக சேவையாளர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் , பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு அன்னாரின் திருவுருவச்சிலைக்கு மாலையிட்டு மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.

வவுனியா தொகுதியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர்.தாமோதரம்பிள்ளை சிவசிதம்பரம் அவர்களின் நினைவான இச் சிலை நிறுவப்பெற்றுள்ளது. ஞாபகார்த்த சிலை அமைப்புக்குழுவினரதும் அதன் தலைவர் நா.சேனாதிராசா ஆகியோரதும் வேண்டுகோளுக்கிணங்க வவுனியாவின் மூத்த சட்டத்தரணி முருகேசு சிற்றப்பலம் அவர்களினால் கடந்த 2015ஆண்டு 07ம் மாதம் 25ம் திகதி இச் சிலை திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.