வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி பரிசளிப்பு விழாவும் பிரகாசம் சஞ்சிகை வெளியீடும்!!

1343


 
வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியின் பரிசளிப்பு விழாவும் பிரகாசம் சஞ்சிகை வெளியீடும் இன்று (09.11.2017) காலை 9.30 மணிக்கு நகரசபை கலாச்சார மண்டபத்தில் கல்லூரி முதல்வர் பா.கமலேஸ்வரி தலைமையில் இடம்பெற்றது.

மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாக நிகழ்வில் வரவேற்பு நடனம், ஆங்கில மற்றும் சிங்களப் பாடல், நாடகம், பிரகாசம் சஞ்சிகை வெளியீடு, நூலின் ஆய்வுரை, பரிசளிப்பு வைபவம், பிரதம, கௌரவ விருந்தினர் உரை என பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன.



இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் கந்தையா சர்வேஸ்வரன், கௌரவ விருந்தினராக வவுனியா தெற்கு வலயக்கல்வி வவுனியா தெற்கு கோட்டக்கல்வி பணிப்பாளர் எம்.பீ.நடராஜ், வவுனியா சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர் யோ.கென்னடி , விருந்தினர்களாக சமய மதத்தலைவர்கள், அரச அரசார்பற்ற உத்தியோகத்தர்கள், சமூக ஆர்வளர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.