வவுனியாவில் டெங்கு ஒழிப்பு செயற்றிட்டம்!!

1014

 
டெங்கு நோயற்ற வவுனியாவை உருவாக்குவோம் எனும் தொனிபொருளில் இன்று (10.11) காலை 9 மணி தொடக்கம் 11 மணி வரை வவுனியா நகரசபையுடன் வவுனியா நகர சிறு வியாபார சங்கமும் வவுனியா பொலிஸாரும் இணைந்து வவுனியா நகர பகுதிகளில் டெங்கு ஒழிப்பு சிரமதானப்பணியில் ஈடுபட்டனர்.

இலங்கையில் பல மாவட்டங்களில் டெங்கினால் பல நூற்றுக்கணக்கான உயிர்கள் காவு கொள்ளப்பட்டுள்ளன. ஆகையால் எங்கள் நகரத்தையும், மக்களையும் பாதுகாத்துக்கொள்ளும் நோக்கில் இச் செயற்திட்டம் மேற்கொள்ளபட்டது.