வவுனியா பூந்தோட்ட பிரதேச முன்பள்ளிகள் இணைந்து நடாத்திய ஆசிரியர் தினமும் கலை நிகழ்வும்!!

969


 
பூந்தோட்டம் பிரதேச 17 முன்பள்ளிகள் இணைந்து நடாத்திய ஆசிரியர் தினமும் கலை நிகழ்வும் பூந்தோட்டம் மகா வித்தியாலயத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (12.11.2017) மிகச் சிறப்பாக பூந்தோட்ட பிரதேச முன்பள்ளி கட்டமைப்பு தலைவர் K.வேலாயுதம்பிள்ளை தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், சிறப்பு விருந்தினராக G.T.லிங்கநாதன் (மாகாணசபை உறுப்பினர்), கௌரவ விருந்தினராக S.மயூரன் (முன்னாள் மாகாணசபை உறுப்பினர்), K.தர்மபாலன் (உதவிக் கல்விப் பணிப்பாளர்-முன்பள்ளி) K.சந்திரகுலசிங்கம் (முன்னாள் நகரசபை உப பிதா, திருமதி K.நந்தபாலன் (அதிபர் – பூந்தோட்டம் மகா வித்தியாலயம்), திருமதி S.அருள்வேல் நாயகி (வவுனியா நகரக் கோட்ட இணைப்பாளர் -முன்பள்ளி)
S.காண்டீபன் (தலைவர்-இளைஞர் கழகம் -திருநாவற்குளம்) மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.



இதன்போது ஆசிரியர்களுக்கு நினைவுப் பரிசில்களும் பெருமதி மிக்க பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.