புத்த பகவானின் உருவத்தை பச்சை குத்திய பிரித்தானிய பெண் ஒருவரை கைது செய்து தடுத்து வைத்தமையால் அவருக்கு அரசாங்கத்தால் நஷ்டஈடு வழங்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தால் பொலிஸாரினால் அவரின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதன் காரணமாக உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இதன்படி குறித்த பிரித்தானிய பெண்ணுக்கு 8 லட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.