சீனாவில் மொடல் சிறுமி விஷம் வைத்து கொலை : வெளியான அதிர்ச்சித் தகவல்!!

532


சீனாவில் மொடல் சிறுமி ஒருவர் வேலைப்பளு காரணமாக உயிரிழந்திருக்கலாம் என கூறப்பட்ட நிலையில், அவரை விஷம் வைத்து கொலை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



ரஷ்யாவின் பிரபல மொடல் சிறுமி Vlada Dzyuba(14) 3 மாத கால ஒப்பந்த அடிப்படையில் சீனாவில் விளம்பர நிறுவனம் ஒன்றில் பணிக்கு சேர்ந்தார்.

இந்த நிலையில் திடீரென்று அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ள சம்பவம் சர்வதேச அளவில் பரபரப்பாக பேசப்பட்டது.



ஆனால் அவரது உடற்கூறு சான்றில் அவர் விஷம் வைத்து கொல்லப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. மருத்துவ காப்பீடு ஏதும் இன்றி குறித்த நிறுவனம் அவரை பணிக்கு அமர்த்தியுள்ளதாகவும், அதனாலையே அவர் நோய்வாய்ப்பட்டிருந்த காலத்தில் சிகிச்சை தாமதமானது எனவும் தற்போது தெரிய வந்துள்ளது.



குறித்த மொடலுக்கு வலுக்கட்டாயமாக விஷம் அளித்திருக்கலாம் எனவும், அல்லது அவரை கொடிய விஷ ஜீவிகள் ஏதும் தீண்டியிருக்கலாம் எனவும் மருத்துவமனை வட்டாரங்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.