வவுனியாவில் கணவனின் அனுமதியின்றி சுயதொழில் பெறச் சென்ற மனைவிக்கு நேர்ந்த கதி!!

796


வவுனியாவில் இன்று (16.11.2017) காலை 11 மணியளவில் கண்டி வீதியிலுள்ள சுயதொழில் வழங்கும் நிறுவனத்திற்குச் சென்ற குடும்பத் தலைவி ஒருவர் மீது அவரது கணவன் சுயதொழில் பெறும் அலுவலகத்திற்குள் வைத்துத் தாக்கியுள்ளதாக சுயதொழில் வழங்கும் நிறுவனத்தின முகாமையாளர் தெரிவித்தார். இது குறித்து மேலும் தெரியவருகையில்,



வவுனியா கண்டி வீதியில் இயங்கிவரும் சுயதொழில் நிறுவனம் ஒன்றிற்கு உதவி பெறுவதற்காக மகாறம்பைக்குளம் பகுதியிலுள்ள குடும்பப் பெண் ஒருவர் சென்று தனது சுயதொழில் திட்டத்திற்கு உதவி செய்யுமாறு தெரிவித்து 10 வீதமான பணத்தினை வைப்புச் செய்துள்ளார்.

இதையடுத்து இன்று காலை அந்நிறுவனத்திற்குச் சென்ற குறித்த பெண்ணின் கணவர் மனைவியை சுயதொழில் அலுவலகத்திற்குள் வைத்து தனது அனுமதியின்றி சுயதொழில் பெறுவதற்கு முயற்சித்துள்ளதாகத் தெரிவித்து தாக்கியதுடன் இதை தடுத்து நிறுத்தச் சென்ற அலுவலகர்கள் மீதும் தாக்க முற்பட்டுள்ளார்.



இதையடுத்து மனைவி வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை மேற்கொண்டுள்ளதாகவும் சுயதொழில் அலவலகத்தினரும் தமது அலுவலகத்திற்குள் வந்து அங்கு பணிபுரியும் அலுவலகர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ள முயற்சித்துள்ளதாகவும் தெரிவித்து முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்யவுள்ளதாகவும் சுயதொழில் நிறுவனத்தின் முகாமையாளர் மேலும் தெரிவித்தார்.