30 வருடங்களின் பின்னர் கொழும்பில் பிரம்மாண்ட ஹோட்டல் ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்றைய தினம்(16.11) Shangri-La Hotels Colombo என்ற சுற்றுலா ஹோட்டல், திறந்து வைக்கப்பட்டுள்ளது.
ஹோட்டல் திறப்பு விழாவில் ஜனாதிபதியுடன், பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஹோட்டலின் பிரதான முகாமைத்துவ பிரதிநிதிகள் மற்றும் அமைச்சர் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
இலங்கை பூர்வீகத்தை கொண்ட பிரபல பொலிவுட் நடிகை ஜெக்லின் பெர்ணான்டஸ் சிறப்பு விருந்தினராக நிகழ்வில் கலந்து கொண்டுள்ளார்.
Shangri ஹோட்டல் குழுமத்தினால் இலங்கையில் நிர்மாணிக்கப்பட்ட இரண்டாவது ஹோட்டல் இதுவாகும்.
கொழும்பு நகரத்தில் புதிய அழகை கொடுத்துள்ள இந்த ஹோட்டலில் 500 அறைகள் மற்றும் 41 குடியிருப்புக்களை உள்ளடங்கியுள்ளது.
குறித்த குழுமத்தின் முதலாவது ஹோட்டல் ஹம்பாந்தோட்டையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.