8வது தடவை மேற்கொண்ட தற்கொலை முயற்சியில் 88 வயது மூதாட்டி மரணம்!!

692
88 வயதான மூதாட்டி ஒருவர் எட்டாவது தடவையாக மேற்கொண்ட தற்கொலை முயற்சியினால் மரணமடைந்துள்ளார்.
இந்த வயோதிபப் பெண் இதற்கு முன்னதாக ரயிலில் பாய்ந்தும், தூக்கிட்டும் ஏழு தடவைகள் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார்.
கட்டுநாயக்க குரன பகுதியைச் சேர்ந்த வயோதிப் பெண் ஒருவரே இவ்வாறு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் நடைபெற்ற மரண விசாரணையின் போது குறித்த மூதாட்டி ஏழு தடவைகள் முன்னதாக தற்கொலைக்கு முயற்சித்தார் என்பது தெரியவந்துள்ளது.
கட்டுநாயக்க குரன பகுதியைச் சேர்ந்த 88 வயதான எக்னஸ் என்ற பெண்ணே இவ்வாறு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
இந்த மூதாட்டி, பிள்ளைகளுடன் கோபித்துக் கொண்டு வீட்டின் ஓர் அறையில் தனித்து வாழ்ந்து வந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் இந்தப் பெண் வீட்டில் வைத்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.