திருமணத்திற்கு ஹெலிகொப்டரில் வந்து இறங்கிய மாப்பிள்ளை : ஆச்சரியமடைந்த உறவினர்கள்!!

491
இந்தியாவில் மாப்பிள்ளை ஹெலிகாப்டரில் வந்து இறங்கிய சம்பவம் தொடர்பான வீடியோ வைரலாக பரவி வருகிறது.
ஷாருக்கான் என்பவர் தனது திருமணத்தின் போது, ஜெய்பூரில் இருந்து உத்திரப்பிரதேசத்தின் காபூர் மாவட்டத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் வந்து இறங்கியுள்ளார்.
ஹெலிகாப்டரில் வந்து இறங்கிய இவரை திருமணத்திற்கு வந்த உறவினர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். இது குறித்து ஷாருக்கான கூறுகையில், திருமணத்தின் போது எனக்கு ஹெலிகாப்டரில் வந்து இறங்க வேண்டு என்பது தான் எனது நீண்ட நாட்கள் கனவு, அது தற்போது நிறைவேறியுள்ளது என்று கூறியுள்ளார்.
இவர் மணமகன் கோலத்தில் ஹெலிகாப்டரில் வந்து இறங்கியது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.