வவுனியா நெளுக்குளம் பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை : மூவர் கைது!!

313


வவுனியா நெளுக்குளம் பொலிஸார் நேற்று (18.11.2017) இரவு 8.30 மணிளவில் மேற்கொண்ட அதிரடி சோதனை நடவடிக்கையின் போது மூன்று மோட்டார் சைக்கிலுடன் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் தாதிய உத்தியோகத்தர் உட்பட மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.



நெளுக்குளம் பொலிஸ் பொருப்பதிகாரி எஸ்.அத்தனாயக்க தலமையிலான குழுவினர் குழுமாட்டுச்சந்திக்கு அருகே நேற்றிரவு மேற்கொண்ட திடிர் சோதனையின் போது மது போதையில் மோட்டார் சைக்கில் செலுத்திய 28,30,31வயதுடைய மூவரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளையும் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்களில் ஒருவர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் தாதிய உத்தியோகத்தர் எனவும் நாளையதினம் வவுனியா மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.



ஏட்டிக்கு போட்டியாக வவுனியாவில் மதுபானசாலைகள் உறுவாகுவதே இதற்கு முழுக்காரணமாகும். வவுனியா குழுமாட்டுச்சந்தியில் 100 மீற்றருக்குள்ளே இரு மதுபானசாலைகள் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.