வவுனியா காத்தார்சின்னக்குளம் அ.த.க பாடசாலை வருடாந்த பரிசளிப்பு விழா!!

672

 
வவுனியா காத்தார்சின்னக்குளம் அ.த.க பாடசாலையில் வருடாந்த பரிசளிப்பு விழா நேற்று முன்தினம் (17.11.2017) அதிபர் சு.சிவஞானம் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் வவுனியா வலயக் கல்விப்பணிப்பாளர் திரு.முத்து ராதாகிருஷ்ணன் கலந்து சிறப்பித்தார். மேலும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் செ.மயூரன் மற்றும் ஓய்வு பெற்ற அதிபர் க.கருணாநிதி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் இவ்வருட 5ம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவி செல்வி டட்லி சோபனாவிடம் லண்டன் அறக்கட்டளை நிதியத்தால் துவிச்சக்கரவண்டி அன்பளிப்பாக வழங்கப்பட்டது. மேலும் பல கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது.