வவுனியாவில் இப்படியும் வீதிகள் : கண்டுகொள்வார்களா உரியவர்கள்!!

299

வவுனியா ஈஸ்வரிபுரம் கிராமத்தில் சுமார் 350க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இக்கிராமத்தில் காணப்படும் அனைத்து வீதிகளும் மிக மோசமாக சேதமடைந்துள்ளதுடன் மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுகின்றது.

தற்போது பெய்துவரும் தொடர்மழையால் அனைத்து வீதிகளும் மக்கள் பயன்படுத்த முடியாத அளவு சேறும் சகதியுமாக காணப்படுகின்றது.

இவ் வீதியூடாக வேலைக்குச் செல்வோர், பாடசாலை மாணவர்கள் பயணிக்க முடியாத நிலைமை காணப்படுவதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதற்கு அரசியல்வாதிகளோ உரிய அதிகாரிகளோ எந்தவித நடவடிக்கயும் எடுக்க வில்லை எனவும் வவுனியா தெற்கு பிரதேச சபைக்கு இக் கிராமத்தின் வீதியை புனரமைத்துத் தருமாறு பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.