கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுற்றித் திரிந்த 40 பேருக்கு அபராதம்!!

360


கட்டுநாயக்க விமான நிலைய பகுதியில் சுதந்திரமாக சுற்றித் திரிந்த 40 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.



குறித்த 40 சந்தேகநபர்களுக்கு தலா 1500 ரூபா வீதம் அபராதம் செலுத்துமாறு மினுவாங்கொட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கட்டுநாயக்க பொலிஸாரினால் இந்த சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், மினுவாங்கொட மாவட்ட நீதிபதி ஷிலனி சத்துரன்தி பெரேரா இந்த உத்தரவை விதித்துள்ளார்.



அத்துடன் நீதிமன்றத்தில் ஆஜராகாத 6 பேரை கைது செய்வதற்கு நீதிபதியால் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.