காதலி மீது அசிட் தாக்குதல் மேற்கொண்டு கொலை செய்த காதலன் கைது செய்யப்பட்டுள்ளார். காதலியை கொலை செய்து விட்டு ஒன்றரை வருடங்களாக மறைந்திருந்த நிலையில் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கெட்டஹெத்த, நாபாவல பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடைய இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
காதலியினால் அடைந்த ஏமாற்றம் காரணமாக, கோபமடைந்த நிலையில் அசிட் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு்ளளது.
கடந்த வருடம் மே மாதம் 31ஆம் திகதி உயிரிழந்த பெண்ணின் அழகு கலை நிலையத்திற்கு சென்று அவர், தலையில் அசிட் தாக்குதல் மேற்கொண்டுள்ளார். இதனால் அந்த பெண் உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட இளைஞன் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.