பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வடமாகாண அரச தாதிய உத்தியோகத்தர்கள் பணிப்புறக்கணிப்பு!!

332

சம்பள முரண்பாடு, பதவியுயர்வு, மேலதிக நேரக் கொடுப்பனவு நிலுவை, கைவிரல் அடையாள வருகை பதிவேட்டை நடைமுறைப்படுத்த மேற்கொண்ட தீர்மானத்தை நிறுத்தல் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் தாதிய, நிறைவுகாண், துணை மருத்துவ சேவையை சேர்ந்தவர்கள் இணைந்து 22.11.2017 அன்று வேலை நிறுத்தத்தை செய்யத் தீர்மானித்துள்ளனர்.

வடமாகாண அரச தாதிய உத்தியோகத்தர் சங்கத்தினரும் இவ் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதால் வடமாகாண சுகாதார அமைச்சின் கீழ் உள்ள வைத்தியசாலைகளில் இவ் ஒருநாள் வேலை நிறுத்தமானது 22.11.2017 காலை 7 மணி தொடக்கம் 23.11.2017 காலை 7 மணி வரை நடைபெறுமெனவும் நோயாளர்களினதும் பொதுமக்களினதும் நன்மை கருதி வேலை நிறுத்தத்தின் போது உயிர்காப்பு நடவடிக்கைகளுக்கான அவசரசிகிச்கைக்கு மாத்திரம் தாதிய உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுவார்கள் என வடமாகாண அரச தாதிய உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர் க.ஜனார்த்தனன் தெரிவித்தார்.