இலங்கையின் 70 ஆவது ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு இலங்கை கிரிக்கெட் சபை 3 நாடுகள் பங்கேற்கும் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரை நடத்த திட்டமிட்டுள்ளது. இதில் இலங்கையுடன் பங்களாதேஷ், இந்தியா ஆகிய அணிகள் மோதுகின்றன.
இந்தத் தொடர் எதிர்வரும் 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8ம் திகதி முதல் 20ம் திகதி வரை கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெறும் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இறுதிப் போட்டியையும் சேர்த்து மொத்தம் 7 போட்டிகள் நடைபெறுகின்றன.
இதன்படி ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா இருமுறை நேருக்கு நேர் மோதும். புள்ளிகள் அடிப்படையில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டியில் மோதும் என்பது குறிப்பிடத்தக்கது.