மட்டக்களப்பு – கற்சேனை, நீலண்டமடு பகுதியில் இளைஞன் ஒருவன் நேற்று மாலை வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வீடொன்றில் ஏற்பட்ட தகராறின் போது குறித்த இளைஞன் கத்தியால் வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
கொலை செய்யப்பட்டவர் 18 வயதினையுடைய அரசடித்தீவு கிராமத்தினைச் சேர்ந்த அழகுதுரை அதீஸ்காந்தன் என இனங்காணப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் உயிரிழந்த இளைஞனின் சடலம் மகிழடித்தீவு வைத்தியசாலையிலிருந்து பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.