இலங்கையில் சுமார் 45 ஆயிரம் பேர் ஹெரோயின் போதைப் பொருளுக்கு அடிமையாகியுள்ளதாக ஆபத்தான ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் பேச்சாளர் பிரதீப் குமார தெரிவித்துள்ளார்
இவர்களில் சுமார் ஆயிரம் பேர் பெண்கள் எனவும், அது முழு எண்ணிக்கையில் 0.5 வீதம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஹெரோயின் போதைப் பொருளை பயன்படுத்தும் பெண்களில் அதிகளவானோர் பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்கள். அவர்களை தவிர மேல் வகுப்பை சேர்ந்த சில பெண்களும் ஹெரோயின் போதைப் பொருளை பயன்படுத்துவதாகவும் பிரதீப் குமார மேலும் தெரிவித்துள்ளார்.