தொல்லை தந்த குடிகார கணவனை கொடூரமாக சேர்ந்து கொன்ற இரண்டு மனைவிகள்!!

366

குடித்து விட்டு தொடர்ந்து தங்களை துன்புறுத்திய கணவரை அவரின் இரண்டு மனைவிகள் சேர்ந்து கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத்தில் உள்ள ஜகத்கிரிகுட்டா பகுதியில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது.

மஹேந்தர் யாதவ் என்ற நபர் தனது இரண்டு மனைவிகளான ஜோதி மற்றும் பத்மாவுடன் வசித்து வந்தார். குடிப்பழக்கம் கொண்ட யாதவ் தினமும் குடித்து விட்டு வந்து இருவரையும் அடித்து துன்புறுத்தியுள்ளார். இது அவர்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் முழு போதையில் வீட்டுக்கு வந்த யாதவ் தனது மூத்த மகன் உதய் கிரணை அடித்து உதைத்துள்ளார். அவரை ஜோதியும், பத்மாவும் தடுக்க முயன்றும் முடியவில்லை.

இப்படியே விட்டால் கணவர் கிரணை கொன்று விடுவார் என பயந்த இரண்டு மனைவிகளும் புடவையால் யாதவ் கழுத்தை நெரித்து கொலை செய்தனர்.

பின்னர் மண்ணெண்ணெய் ஊற்றி கணவர் சடலத்தை தீயிட்டு எரித்தார்கள். சம்பவம் குறித்து அறிந்த பொலிசார் யாதவின் சடலத்தை கைப்பற்றியதோடு, ஜோதி மற்றும் பத்மாவை கைது செய்தார்கள். இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.