பறக்கும் விமானத்தில் சைவ உணவு கேட்டு அடம்பிடித்த பயணி : பரிமாறப்பட்ட விசித்திர உணவு!!

433

கொலம்பியா தேசிய விமான சேவை நிறுவன விமானம் ஒன்றில் சைவ உணவு கேட்டு அடம்பிடித்த பயணி ஒருவருக்கு அப்பிள் மற்றும் பேரிக்காயை உணவாக அளித்த சம்பவம் சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது.

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் குறித்த சம்பவம் நடந்துள்ளது. இங்குள்ள தேசிய விமான சேவை நிறுவனமான Avianca விமானத்தில் Steve Hogarty என்ற நபர் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் பயணம் மேற்கொண்டுள்ளார்.

இறைச்சி உணவுகளை விரும்பாத அவர் அன்று தமக்கு சைவ உணவு வேண்டும் என கேட்டுள்ளார். ஆனால் சைவ உணவுகள் அப்போது தீர்ந்துவிட்டதாக விமான ஊழியர்கள் பதிலளித்துள்ளனர்.

இருப்பினும் Hogarty நிர்பந்தம் பிடிப்பதால் இறுதியில் விமான ஊழியர்கள் அவருக்கு சைவ உணவு என்ற பெயரில் முழு அப்பிள் ஒன்றும் ஒரு பேரிக்காயும் உணவாக வழங்கியுள்ளனர்.
மட்டுமின்றி அதனுடன் பிளாஸ்டிக் கத்தியும் முள்கத்தியும் அளித்துள்ளனர்.

குறித்த நபர் தனது டுவிட்டர் பக்கத்தில் அதை புகைப்படமாக பதிவு செய்துள்ளார். குறித்த புகைப்படம் வைரலான நிலையில், Avianca விமான சேவை நிறுவனம் இவருக்கு மேலதிக தகவல் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளது, மட்டுமின்றி விசாரணைக்கு உத்தரவிடவும் உறுதி அளித்துள்ளது.