மரக்கறி விலைகள் அதிகரிப்பு!!

459

மரக்கறி விலை 15 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது. கொழும்பு மெனிங் சந்தையில் தற்போது மரக்கறி விலை துரிதமாக அதிகரித்து செல்வதாக அதன் செயலாளர் காமினி ஹதுந்கே தெரிவித்துள்ளார்.

இதேவேளை தம்புளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு நுவரெலியாவிலிருந்து வருகின்ற மரக்கறியின் விலை 30 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது.

தற்போது நிலவுகின்ற மழையுடனான வானிலை காரணமாக இவ்வாறு மரக்கறியின் விலை உயர்வடைந்துள்ளது.

அந்தவகையில் தம்புள்ளை பொருளாதார மத்தியநிலயைத்தில் போஞ்சி ஒரு கிலோகிராம் 100 ரூபாவாகவும் தக்காளி ஒரு கிலோ 45 ரூபாவாகவும் கறிமிளகாய் ஒரு கிலோவின் விலை 280 தொடக்கம் 300 ரூபாவரையும் பச்சைமிளகாய் ஒரு கிலோ 650 தொடக்கம் 700 ரூபா வரையும் புடலங்களாய் 120 ரூபாவாகவும் காணப்படுகின்றது.

மேலும் நுவரெலியா மறக்கிறியின் விலை லீக்ஸ் ஒரு, கிலோகிராம் 160 தொடக்கம் 170 ரூபா வரையும் கரட் ஒரு கிலோ 160 தொடக்கம் 180 ரூபா வரை காணப்படுவதுடன் கோவா ஒரு கிலோ 110 ரூபாவாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.