பணம் இல்லாததால் மகளின் திருமண வரவேற்பை மாடு வதைக் கூடத்தில் நடத்திய கூலித் தொழிலாளி!!

411


நீலகிரி மாவட்டத்தில் கூலித்தொழிலாளி ஒருவர் போதிய பணம் இல்லாத காரணத்தால் தனது மகளின் திருமணத்தை மாடுகள் வதை கூடத்தில் நடத்தியுள்ளார்.



பொன்னுசாமி என்பவரின் மகள் மீனாவுக்கும், சுகுமார் என்பவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

பொன்னுசாமியின் வீடு அருகே உள்ள குசுமகிரி முருகன் கோவிலில் சுகுமாருக்கும், மீனாவுக்கும் திருமணம் நடந்தது.



இதன்பின்னர், திருமண வரவேற்பை நடத்துவதற்கு தன்னிடம் பணம் இல்லாத காரணத்தால் தான் வேலைபார்த்து வரும் கூடலூர் துப்புகுட்டி பேட்டையில் நகராட்சிக்கு சொந்தமான மாடுகளை வதை செய்யும் கூடத்தில் நடத்தி திட்டமிட்டு, அதனை மண்டபாக மாற்றியுள்ளார்.



அதன்படியே, மாடுகள் வதை கூடத்தில் நடைபெற்ற திருமண வரவேற்பில் உற்றார் உறவினர்கள் கலந்துகொண்டனர்.