சீரற்ற வானிலை மீண்டும் சிவப்பு எச்சரிக்கை!!

314


கொழும்பிற்கு மேற்கு பக்கமாக 300 கிலோமீற்றர் தொலைவில் அரேபிய கடலில் தற்போது நிலைகொண்டுள்ள தாழமுக்கம் சில மணித்தியாலயங்களில் சுழல்காற்றாக வீரியமடைந்து மேற்கு – வடமேற்கு பகுதியூடாக நகரும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.



இதனால் நாட்டின் பல பகுதிகளிலும் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யும் என திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

நாட்டின் மேற்கு மற்றும் தென் பகுதிகளில் மணித்தியாலத்திற்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் தெற்கு மற்றும் மேற்கு கரையோரங்களில் மணித்தியாலத்திற்கு 90 முதல் 100 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.



கடற்பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுவதனால் மீனவர்களை கடலுக்கு செல்லவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



இதேவேளை நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 11 மாவட்டங்களில் உள்ள 66 பிரதேச செயலகப்பிரிவுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ அமைச்சு அறிவித்துள்ளது.


சீரற்ற வானிலையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனர்த்த காப்புறுதி திட்டத்தின் கீழ் 10,000 ரூபாய் வீதம் வழங்குவதற்கு நடவடிக்ககை எடுக்கபட்டுள்ளதாக அனர்தத முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்படவர்களுக்கான நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.


இதுவரை நுவரெலியா மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் 4 இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்ட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை முன்எச்சரிக்கை நடவடிக்கையாக 1900 தற்காலிக கூடாரங்கள் கொழும்பு, காலி, மாத்தறை, களுத்துறை ஆகிய மாவட்டங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை அனர்தங்களை எதிர்கொள்வதற்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் தெரிவித்தார்.

இதற்காக முப்படையினர் மற்றும் பொலீசாரின் உதவியும் பெற்றுக்ெகாள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.