வவுனியா பாடசாலைக்கு மாகாண சபை உறுப்பினர்கள் உதவி!!

319

 
வவுனியா மதியாமடு விவேகானந்தா வித்தியாலயத்திற்கு தேவையான பாடசாலை உபகரணங்கள், வட மாகாண சபை உறுப்பினர்களால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

மாகாண சபை உறுப்பினர்களுக்கான நிதியிலிருந்து இந்த உபகரணங்கள் குறித்த பாடசாலைக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.

வடமாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் பாடசாலைக்கான பாண்ட் வாத்தியத்தையும், ம.தியாகராஜா மற்றும் செந்தில்நாதன் மயூரன் இணைந்து கதிரைகளும், ப.சத்தியலிங்கம் குடிநீர்தாங்கியும் வழங்கி வைத்தார்.

பாடசாலை அதிபர் சி.சிவராசா தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில், வடமாகாண சபை உறுப்பினர்கள், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர்கள் என பெரும்பாலானோர் கலந்துக் கொண்டனர்.